Thursday, December 9, 2010

106-திவ்யதேச அட்டவனை-2


106-திவ்யதேச அட்டவனை-2

10. திரு ஆதனூர்:

ஆண்டளக்குமய்யன் - ஸ்ரீரெங்கநாயகி- ப்ரணவ விமாநம்- சூரிய புஷ்கரிணி -கிழக்கே திருமுகமண்டலம்- புஜங்க சயனம்-காமதேனுவுக்கும், திருமங்கையாழ்வாருக்கும் ப்ரத்யக்ஷம்.

பாசுரங்கள்-மங்களாஸாசனம் :
திருமங்கையாழ்வார்: அன்னவனை.

11. திருவழுந்தூர்:

ஆமருவியப்பன்- செங்கமலவல்லி தாயார்- கருட விமாநம் - தர்சனபுஷ்கரிணி- கிழக்கே திருமுகமண்டலம்- நின்ற திருக்கோலம் - உபரிசர்வஸுவுக்கும், காவேரிக்கும், தருமதேவதைக்கும் ப்ரத்யக்ஷம்.

பாசுரங்கள்-மங்களாஸாசனம் :
திருமங்கையாழ்வார்: தந்தைகாலில், சிங்கமதாய், திருவுக்கும், செங்கமல, கல்லுயர்ந்த, தேமருவு, கீறார்கணபுரம், அள்ளல்வாய்.

12. சிறுப்புலியூர்:

அருமா கடல்- திருமாமகள் நாச்சியார்- நந்தவர்த்தந விமாநம்- அநந்தஸரஸுமாநஸ புஷ்கரிணி- தெற்கே திருமிக மண்டலம்- புஜங்க சயனம்- வ்யாஸ மகரிஷிக்கும், வ்யாக்ரமருக்கும் ப்ரத்யக்ஷம்

பாசுரங்கள்-மங்களாஸாசனம் :
திருமங்கையாழ்வார்:  கள்ளம்.

13. திருச்சேறை: ஸார க்ஷேத்ரம்:

சாரநாதன்- ஸாரநாயகி- ஸார விமாநம்- ஸார புஷ்கரிணி- கிழக்கே திருமுக மண்டலம்-நின்ற திருக்கோலம்- காவேரிக்கு ப்ரத்யக்ஷம்.

பாசுரங்கள்-மங்களாஸாசனம் :
திருமங்கையாழ்வார்: கண்சோர- வானையார்- சீரார்கணபுரம்- மன்னியதன்.

14. தலைச்சங்க நாண்மதியம்:

நாண்மதிய பெருமாள்- வெண்சுடர் பெருமாள் -தலைச்சங்கநாச்சியார்-செங்கமலவல்லி-சந்திர விமாநம்- கிழக்கே திருமுக மண்டலம்-சந்திர புஷ்கரிணி- நின்ற திருக்கோலம்-தேவப்ருந்தங்களுக்கும், சந்திரனுக்கும் ப்ரத்யக்ஷம்.

பாசுரங்கள்-மங்களாஸாசனம் :
திருமங்கையாழ்வார்: நன்னீர்.

15. திருக்குடந்தை ( கும்பகோனம் )

சாரங்கபாணி பெருமாள்- ஆராவமுதன்- கோமளவல்லி-வைதிக விமாநம்- ஹேமபுஷ்கரிணி- கிழக்கே திருமுக மண்டலம்- உத்யோக சயனம்-ஹேம மஹரிஷிக்கு ப்ரத்யக்ஷம்

பாசுரங்கள்-மங்களாஸாசனம் :
பெரியாழ்வார்-கொங்கும், குடங்கள்
திருமழிசையாழ்வார்: இலங்கை, நடந்த.நாகத்தணை
திருமங்கையாழ்வார்: ஆவியே, இற்பிறப்பு, அன்றாயர், வாளாய, குயிலாலும், வாராளும், பொங்கேறு, வந்த நாள், பேரானை, வந்தாய், தோடவிழ்-வானையார், இங்கே, அண்டத்தின், மூவரில், காவியை, பொங்கார், முற்றாரா, அன்றாயர், ஒரு பேருந்தி, செல்வமல்லார், காரார் குடந்தை, பொன்னிம
.பூதத்தாழ்வார்: .எங்கள் பெருமான்., தமருள்ளம்.
பேயாழ்வார்: சேர்ந்த திருமால், விண்ணகரம்.
நம்மாழ்வார்:ஆராவமுதே,

16. திருகண்டியூர்:

அரன்சாபம் தீர்த்தவர் -கமலவல்லி நாச்சியார், கமலாக்ருதி விமாநம், கபால தீர்த்தம், கிழக்கே திருமுக மண்டலம், நின்ற திருக்கோலம்-ருத்ரனுக்கு கபாலவ்ருத்திச்ய்தவர், அகஸ்தியருக்கு ப்ரத்யக்ஷம்.
திருமங்கையாழ்வார்: பிண்டியார்.

17. திருவிண்ணகர்:

உப்பிலியப்பன், பூமிதேவி நாச்சியார், விஷ்ணு விமாநம், அர்த்தி புஷ்கரிணி, கிழக்கே திருமுக மண்டலம், நின்ற திருக்கோலம், மார்க்கண்டேயருக்கும், பெரிய திருவடிக்கும், காவேரி, தர்ம தேவதைக்கும் ப்ரத்யக்ஷம்.

திருமங்கையாழ்வார்:வண்டுணு, பொருத்தேன், துறப்பேன், பத்தராவியை, அன்றாயர்.
பொய்கையாழ்வார்: வேங்கடமும்.
பேயாழ்வார்:பண்டெல்லாம், விண்ணகரம்.
திருமங்கையாழ்வார்: காரார்மணிநிற,
நம்மாழ்வார்:நல்குரவும்

18. திருகண்ணபுரம்:
சௌரிராஜர் -கண்ணபுரிநாயகி - உத்பலாவர்த்தக விமாநம்- நித்ய புஷ்கரிணி- கிழக்கே திருமுக மண்டலம்- நின்ற திருக்கோலம்-கண்வ மாமுனிக்கு ப்ரத்யக்ஷம்.

பாசுரங்கள்-மங்களாஸாசனம் :
பெரியாழ்வார்: உன்னையும்.
ஆண்டாள்: காட்டில்.
குலசேகர ஆழ்வார்: மன்னு புகழ்
திருமங்கையாழ்வார்:  சிலையிலங்கு, தெல்ளியீர், கரையெடுத்த, விண்ணவர், தந்தைகாலில், தொண்டீர், வியமுடை, வானேரளவு,கைம்மாணம், வண்டார், கன்றுமேய்த்து, செங்கால, சீரார்கணபுரம்,கணபுரத்து, கண்ணனை,
நம்மாழ்வார்:மாலைகண்ணி

19. திருவாலி:

வயலாலிமணவாளன்-அம்ருதகடவல்லி- அஷ்டாக்ஷர விமாநம்- இலாக்ஷணி புஷ்கரிணி- அலாத்நி புஷ்கரிணி- மேற்கே திருமுக மண்டலம்- வீற்றிருந்த கோலம்- அலாதநிகஞ்சம ப்ரஜாபதிக்கும், திருமங்கையாழ்வாருக்கும் ப்ரத்யக்ஷம்
பாசுரங்கள்-மங்களாஸாசனம் :
திருமங்கையாழ்வார்: கள்வன், எஞ்சா கற்றார், படை நின்ற, நெஞ்சுருகி, பேராலி, மாமலர்மேல்.

20. திருநாகை:

சௌந்தர்ய ராஜர் - சௌந்தர்ய வல்லி- சௌந்தர்ய விமாநம்- ஸார புஷ்கரிணி- கிழக்கே திருமுக மண்டலம்- நின்ற திருக்கோலம்- நாகராஜனுக்கும், திருமங்கையாழ்வாருக்கும் ப்ரத்யக்ஷம் -

பாசுரங்கள்-மங்களாஸாசனம் :
திருமங்கையாழ்வார்: பொன்னிவர்.


R.Jagannathan.



Wednesday, December 1, 2010

108- திவ்யதேசங்களின் அட்டவணையும் குறிப்பும்



பல வருஷங்களாக வைஷ்ணவத்தைப்பற்றி பல அரிய நூல்களை அடியேன் படித்து வருகின்றேன். அன்பர்களுக்கும் அவைகளை-வேகா சேது- என்ற பிளாக்கில்- ஓம் நமோ நாராயணா! என்ற பகுதியிலும், ஹரே குருவாயூரப்பா என்ற பகுதியிலும் தொடர்ந்து அளித்து வருகிறேன். சில புத்தகங்கள் 60- வருஷத்திற்கு முன்பே வெளிவந்தவை-பக்கங்கள் எல்லாம் நசிந்து பொடியாகி விட்டன.

அவைகளை வெளிகொணர்ந்து மீண்டும் அன்பர்களுக்கு அளிக்கும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது பகவானின் பெரும் கருணை. அதில் முக்கியமான ஒரு நூல்- 60- வருஷத்திற்கு முன்பு எழுதிய-நாலாயிர திவ்யப்பிரபந்தைப்பற்றி- அந்த நூல் யார் எழுதினார் என்று கண்டுபிடிக்க முடியாமல்-பக்கம் அரித்துவிட்டது. அந்த புத்தகத்தின் படத்தை பார்க்கலாம்-அதில் வரையப்பட்டிருக்கும் ஆழ்வார்களின் படத்தையும் பார்க்கலாம்- இந்த படங்கள் வேறு எங்கும் பார்க்கமுடியாத ஒரு அரிய பொக்கிஷம்.

அந்த புத்தகத்திலிருந்து சில முக்கியமான பகுதிகளை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது என் அதிர்ஷ்டம்

ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்யப்பெற்ற
108- திவ்யதேசங்களின் அட்டவணையும் குறிப்பும்

கீழ் கண்ட பாசுரம் வெகு அரிது: திவ்ய தேசத்தைப்பற்றி:

ஈரிருப தாஞ்சோழ மீரொன்ப தாம்பாண்டி
ஓர்பதின்மூன் ராமலைநா டோரிண்டாம்- சீர்நடுநா
டாறோம் ரெட்டுதொண்டையவ்வடநா டாறிண்டு
கூறுதிரு நாடொன்றாம் கொள்

திவ்ய தேசங்களின் ப்ரபாவம்:

1. சோழ நாட்டு திருப்பதிகள்.


1. க. திருவரங்கம் பெரிய கோயில்:
ஸ்ரீரங்கம்- ஸ்ரீரங்கநாதன் - நம்பெருமாள்- ஸ்ரீரங்க நாச்சியார்- ப்ரணவாக்ருதி விமானம்-காவேரி நதி- சந்திர புஷ்கரிணி-புன்னை விருக்ஷம்- புஜங்க சயநம்-தெற்கே திருமண்டலம்-தர்மவர்மாவுக்கும், ரவிதர்மனுக்கும் ப்ரத்யக்ஷம்.

மங்களாசாஸனம் செய்த ஆழ்வார்கள்-பாசுரங்களின் தலைப்பு:

பெரியாழ்வார்: கருவுடை- சீமாலிகன் - வண்டுகளித்து- கன்னிநன்மா -மாதவத்தோ- மரவடியை- துப்புடையா-
ஆண்டாள்: தாமுகக்கும்.
குலசேகராழ்வார்: இருளிரிய- தேட்டரும்- மெய்யில்-திருச்சந்த விருத்தம்-மண்ணு.
தொண்டரடிபொடியாழ்வார்: காவலில்- கதிரவன்.
திருப்பாணாழ்வார்: அமலன்
திருமங்கையாழ்வார்: பள்ளியாவது-உந்திமேல்-வெருவாதாள்- கைம்மானம்-பண்டை- ஏழை-உரங்களால்- தரங்கநீர்- புனைவளர்-கண்ணன்- அணியார்- இம்மையை-ஆவியை- இரும்பு- பிண்டியார்- பட்டுடுக்கும்- நெஞ்சுருகி- முளைக்கதிரை-கார்வண்ணம்- முற்றாரா- கைவள.
பொய்கையாழ்வார்: ஒன்றுமறந்து.
பூதத்தார்: மனத்துள்ளான்-பயின்றதரங்கம்- தமருள்ளம்
பேயாழ்வார்: விண்ணகரம்.
திருமழிசையாழ்வார்: பாலில்கிடந்து - அவ்வென்னை-நாகத்துணை- ஆள்பார்த்து-
நம்மாழ்வார்: தண்ணந்துழாய்.
திருமங்கையாழ்வார்: ஆராமம்சூழ்ந்த- மன்ணுமரங்கத்து-


2. உ.. உறையூர்- நிசுளாபுரி: திவ்ய தேசங்களின் ப்ரபாவம்:

அழகிய மணவாளன் - கல்யாண விமானம் - வாஸலக்ஷ்மி- உறையூர்வல்லி- கல்யாண தீர்த்தம்-
குடமுருட்டி ஆறு- வடக்கே திருமுக மண்டலம்- நின்ற திருக்கோலம்- முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், ரவிதர்ம ராஜாவிற்கும் ப்ரத்யக்ஷம்.
மங்களாசாஸனம் செய்த ஆழ்வார்கள்-பாசுரங்களின் தலைப்பு:
திருமங்கையாழ்வார்- கோழியும் கூடலு

3. தஞ்சை மாமணிக்கோவில்:

நீலமேகப்பெருமாள்- செங்கமலவல்லி-சௌந்தர்ய விமானம் -கன்னிகா புஷ்கரணி- அமுத தீர்த்தம்- கிழக்கே திருமுகமண்டலம்- வீற்றிருந்த திருக்கோலம்-பராசமுனிக்கு ப்ரத்யக்ஷம்.
தஞ்சையாளிநகர்:
நரசிங்க பெருமாள்- தஞ்சைநாயகி-வேதசுந்தர விமானம்-சூரிய புஷ்கரிணி -ஸ்ரீராம தீர்த்தம்- கிழக்கே திருமுக மண்டலம்-வீற்றிருந்த திருக்கோலம்-மார்கண்டேயருக்கு ப்ரத்யக்ஷம்-
திருமங்கையாழ்வார்-எம்பிரான், உடம்புருவில்.
பூதத்தார்-தமருள்ளம்.

4. அன்பில்:

திருவழகிய நம்பி- அழகியவல்லித்தாயார்- தாரகவிமாநம்- மண்டூக புஷ்கரிணி- கிழக்கே திருமுக மண்டலம்-நின்ற திருக்கோலம் -புஜங்கசயனம்-ப்ரம்மாவிற்கும், வால்மீகருக்கும் ப்ரத்யக்ஷம்
திருமழிசையாழ்வார்- நாகத்தணை

5. கரம்பனூர்( உத்தமர் கோயில் ):

புருஷோத்தமன்- பூர்வாதேவி- உத்யோக விமாநம்- கதம்ப தீர்த்தம்- வாழைமரம்-கிழக்கே திருமண்டலம்- புஜங்க சயனம்- கதம்ப மகரிஷிக்கும், திருமங்கையாழ்வாருக்கும்,உபரி சரவஸுவுக்கும், ஸநக, ஸநந்தன குமாரர்களுக்கும் ப்ரத்யக்ஷம்
திருமங்கையாழ்வார்: பேரானை.

6. திருவெள்ளரை:

புண்டரீகாக்ஷன்- பங்கையச்செல்வி- செண்பகவல்லி - விமலாக்ருதி விமாநம்- குச தீர்த்தம், மணிகர்ணிகா தீர்த்தம், சக்ர தீர்த்தம், திவ்ய புஷ்கரணி, புஷ்கல தீர்த்தம், பத்ம தீர்த்தம், கந்த புஷ்கரிணி, க்ஷீர புஷ்கரிணி, வராக தீர்த்தம், சுவேதகிரி-கிழக்கே திருமண்டலம்-நின்ற திருக்கோலம்- பெரிய திருவடிக்கும், சிபி சக்ரவர்த்திக்கும், பூதேவிக்கும், மார்க்கண்டேயருக்கும் ப்ரத்யக்ஷம்-

பேயாழ்வார்: உன்னையும், இந்திரனோடு
திருமங்கையாழ்வார்: வென்றிமா, துளக்கமில், பேராமருதிறுத்தா, மின்னயிருசுடரை

7. புள்ளம்பூதங்குடி:

வல்விலிராமன் - பொற்றாமரையாள்-சோபாவிமாநம்- க்ருத்ர தீர்த்தம்- கிழக்கே திருமண்டலம்- புஜங்க சயனம்- சக்ரவர்த்தி திருமகனுக்கும், க்ருத்ர ராஜனுக்கும் ப்ரத்யக்ஷமாய் மோக்ஷம் தந்தவிடம்.

திருமங்கையாழ்வார்: அறிவதரியான்.

8. திருப்பேர்நகர்:

அப்பக்குடத்தான்- கமலவல்லி தாயார்- இந்திர விமாநம்- மேற்கே திருமண்டலம்- புஜங்க சயனம் - வலது கையின் கீழே குடம்- உபமனுவுக்கும், பராசரருக்கும் ப்ரத்யக்ஷம்.

பெரியாழ்வார்: கொங்கும், கொண்டல்
திருமங்கையாழ்வார்: கையிலங்கு, பிண்டியார், மதிளகச்சி
திருமழிசையாழ்வார்: நீரகத்தாய்,
நம்மாழ்வார்:திருமாலிரும்.

R.Jagannathan

Tuesday, October 26, 2010

எனக்கு வந்த ஜாக்பாட் மெயில்

எனக்கு வந்த ஜாக்பாட் மெயில்

சும்மா கிடக்கும் சங்கை ஊதி கெடுத்தவன் மாதிரி எனக்கு ஒரு இ-மெயில் வந்தது. நெம்பர்-7 உங்களுடைய இ-மெயில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் 7- நபராக ஜாக்பாட் பரிசு கிடைத்திருக்கிறது. உடனே கிழ்கண்ட முகவரிக்கு அணுகவும் என்று ஒரு PDF-பைல் ஒன்றை திறந்து பார்க்கவும் என்று இருந்தது.

எனக்கு ஒரே அதிர்ச்சி! அதன் நகலை கீழே பார்க்கவும்:

Attn Winner No. (7).

This is to bring to your notice that your mail was received here in our office.

Dear winner please you are mandated to fill the attatched form that was sent to you from our office here in Uk for verification purposes inorder for us to proceed with the transfer of your won fund into your specified Bank Account.

Therefore, we once again attatch the form to this mail for you to fill completely and return it back to us to enable us process the transfer of your won fund.

We look forward to your urgent response to this mail.

Sincerely,
Dr. Duke Larry.
MEGA MILLIONS FINANCIAL DIRECTOR.


WINNERS VERIFICATION FORM FOR FUND TRANSFER..docx

எனக்கு நன்றாக தெரியும் இது ஒரு போலி மெயில்-நம்மிடமிருந்து பல விஷயங்களை கறக்க ஒரு வழி என்று சும்மா இருந்துவிட்டேன். ஆனாலும் என் எண்ணங்கள் என்னை சும்ம இருக்கவிடமுடியவில்லை. ஒரு வேளை இது நிஜமாக இருக்கலாமோ! இருந்தால்------

நான் கனவு காண தொடங்கிவிட்டேன்.

அந்த சமயத்தில் TV-யில் தினம் ஒரு திவ்ய நாமம்-என்ற தொடரில் ஒரு பாழடைந்த கோவிலை காண்பித்து இதை புனருத்தானம் செய்ய அன்பர்களை அழைத்தார்-திரு. அனந்த பத்மநாபாச்சாரியார். தமிழ் நாட்டில் எத்தனையோ கோயில்கள் இது மாதிரி இருக்கின்றன. என் எண்ணம் அங்கே சுழன்றது. நமக்கு கிடைக்கபோகும் ஜாக்பாட்டில்-ஒரு கோடி இதற்கு ஒதுக்கிவிடலாம். என் மனம் சந்தோஷம் அடைந்தது.

அடுத்து-எல்லா கர்நாடக கோயில்களிலும் மதியம் வரும் யாத்திரீகர்களுக்கு சாப்பாடு கிடைக்கும். நம் தமிழ் நாட்டில் அப்படி இல்லையே என்று ரொம்ப நாளாக வருத்தம். உடனே என் மனம்-ஜாக்பாட்டிலிருந்து ஒரு கோடி இதற்கு கொடுத்து நிறந்தர கட்டளை ஏற்பாடு செய்துவிடலாம்.

நான் அயோத்திக்கு சென்றபோது அங்கு வால்மீகி பவனுக்கு சென்றிருந்தேன். அங்கே வால்மிகி ராமாயணத்தில் உள்ள 22,000 ஸ்லோகங்களையும் சலவை கல்லில் எழுதி பார்வைக்கு வைத்திருந்தார்கள். அன்று நான் நினைத்தேன்- இது மாதிரி நமது நாலாயிரம் திவ்ய ப்ரப்ந்தத்தை இது மாதிரி ஸ்ரீரங்கம் ரங்கவிலாஸில் எழுதி மாட்டிவைத்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும். என் மனம் அங்கே ஓடியது. நமக்கு கிடைக்கும் ஜாக் பாட்டில் ( சுமார்-20- கோடி ) ஒரு கோடி இதற்கு ஒதுக்கிவிடலாம்.

என்னை சமயத்தில் கைதூக்கிவிட்டது- திருப்பதி-ஸ்ரீனிவாச பெருமாளின் கருணை உள்ளம் தான். இதை நான் ஒருபோதும் மறக்கவில்லை, மறக்கவும் முடியாது. பகவான் நன்றி கடனை ஒரு போதும் எதிர்பார்க்கமாட்டார். இந்த ஜாக்பாட் பரிசும் அவர் கருணதானே! அதனால் ஒரு கோடி உண்டியலில் யாருக்கும் தெரியாமல் போட்டுவிட்டு வந்துவிடவேண்டும்.

என் பையன் ஒரு டாக்டர். அவனும் சில டாக்டர் நண்பர்களும் சேர்ந்து முதியோர் இல்லம் நடத்தி வருகிறார்கள். இதை விரிவு படுத்தி பெங்களூரில் குறைந்தது- 50 பேர்களுக்கு தங்கும் வசதி, மருத்துவ வசதி போன்றவைகளை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என்று ரொம்ப நாளாக ஆவல். அதற்கும் இந்த பணம் உதவும். அதற்காக ஒரு கோடி ஒதுக்கலாம்.

பல வருஷங்களாக என் குடும்பத்தினர் நிறைய தோட்டம் துறவோடு இருக்கும் வீட்டில் வருஷத்திற்கு சில மாதம் தங்கி இருக்கவேண்டும் என்று கனவு காண்பார்கள். அவர்கள் கனவை நிறைவேற்ற இதோ ஒரு வரப்ரசாதம்.

இப்படியாக பல பல திட்டங்களை மனதில் சிந்தித்துகொண்டே துங்கிவிட்டேன். சுமார் விடியற்காலம் 3- மணிக்கு ஒரு கனவு கண்டேன்- என் வங்கி பணத்தை திருடி அதை சுமார் ஒரு லட்சமாக மாற்றி யாரோ- நைஜீரியாவில் சேர்த்துக்கொண்டார்கள் அதை நான் உடனே கட்டவேண்டும் என்று வங்கியிலிருந்து கட்டளை வந்ததாக அந்த கனவு. திடீரென்று விழித்துக்கொண்டு இது ஒரு வேளை உண்மையாக இருக்கலாமோ! என்ற கவலை. அதன்பிறகு தூக்கம் வரவில்லை.

உடனே கடவுளை வேண்ட ஆரம்பித்தேன்-தெய்வமே இது உண்மையாக இருக்கக்கூடாது-எனக்கு ஜாக்பாட் ஒன்றும் வேண்டாம்-என்னை விட்டால் போதும் என்று மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டேன். மறு நாள் வங்கிக்கு ஓடினேன். வங்கி மேனேஜரை சந்தித்து-என் கவலையை சொன்னேன்.

அவர் அதற்கு இது மாதிரி நிறையபேர் எங்களை தேடி வருகிறார்கள். எங்களுக்கு பலத்த பாதுகாப்பு-இண்டர்னெட் ஸெக்யூரிடி- இருக்கிறது. இம்மாதிரி போலி மெயில்கள் எல்லாவற்றையும் வடிகட்டி குப்பையில் போட்டுவிடுவோம்- நீங்கள் கவலை படாமல் போங்கள் என்றார்.

அப்பா! நாம் தப்பித்தோம் என்று சமாதானம் அடைந்தேன்.

மறு நாள் இதுமாதிரி மெயில் ஒன்று வந்தது. அதை உடனேயே அழித்துவிட்டேன்.

R.Jagannathan.

( பல பேர்கள் இம்மாதிரி தவிப்பார்கள்- அவர்களுக்கு இது மாதிரி மெயில் வந்தால் என்ன செய்யவேண்டும் என்பதை அடுத்த பிளாக்கில் விவரமாக பார்க்கலாம். )

Thursday, September 23, 2010

மூட்டை பூச்சியும், கொசுவும்

மூட்டை பூச்சியும், கொசுவும்

ஒரு நகரத்தில் ஒரு பணக்காரர் வீட்டில் அழகான, மிருதுவான பட்டு மெத்தை, தலைகாணியுடன் படுக்கை அறை அமைந்திருந்தது. அதில் மதியமும், இரவும் தனவானும் அவரது மனைவியும் படுப்பதற்கு வருவார்கள். பாக்கி நேரம் முழுவதும் யாரும் கிடையாது.

அந்த படுக்கையில் சுதந்திரமாக மூட்டை பூச்சி குடும்பம் வாழ்ந்து வந்தது. இப்படியே பல காலம் சென்றன. இதற்கிடையில் ஒரு கொசு ஜன்னல் திறந்து இருந்ததால் உள்ளே நுழைந்தது. இதை கண்ட மூட்டை பூச்சி அதை தடுத்து நிறுத்தியது.

கொசு தாழ்ந்த குரலிலும், வணக்கத்துடன்- நான் இதுவரையிலும் அருகில் உள்ள மிலிடெரி காம்பில் வசிக்கும் ராணுவ வீரர்களை ந்ம்பி வாழ்ந்துவந்தேன். அவர்கள் இரத்தம் தடித்து விட்டது-உப்பும் அதிகமாகி விட்டது. அதனால் வேறு இடத்தை தேடி இருந்தேன்.

உங்களோடு போட்டி போடமாட்டேன். நீங்கள் அனுமதித்தால் நானும் இங்கு தங்குகிறேன் என்றது. மூட்டை பூச்சி இதற்கு ஒரு நிபந்தனை பேரில் அனுமதித்தது. கொசு பகலில் தனவான் பகலில் கொஞ்ச நேரம் தூங்க வருவார். அப்போது அவரது காலில் நீ கடிக்கலாம் என்றது மூட்டை பூச்சி. இதற்கு கொசு சம்மதித்தது.

அது மாதிரி கொசு செய்தது. அப்போது தனவானுக்கு கடுமையான கோபம் வந்தது. வேலையாட்களை கூப்பிட்டு படுக்கையை உதறி செய்து அவரை கடித்த பூச்சிகளை கொன்று விடுங்கள் என்றது. அதை கேட்ட கொசு பறந்து போய்விட்டது. ஆனால் மூட்டை பூச்சிக் குடும்பத்துடன் மாட்டிக்கொண்டது. வேலை காரர்கள் அவைகளை கொன்றுவிட்டார்கள்.

புதிதாக நண்பர்களை சேர்க்கும் போது தீர ஆலோசனை செய்யவேண்டும், இல்லாவிட்டல் முதலுக்கே மோசமாகிவிடும்.

Monday, September 20, 2010

Three Fishes

மூன்று மீன்கள்

ஒரு குளத்தில் மூன்று மீன்கள் வாழ்ந்து வந்தன. அவர்கள் சந்தோஷமாக காலம் தள்ளிவந்தன. ஒரு நாள் சில மீனவர்கள் அந்த பக்கம் வந்தார்கள். அவர்கள் இந்த குளத்தில் நிறைய மீன்கள் இருக்கின்றன. வலையை வீசினால் நல்ல மீன்கள் கிடைக்கும் என்று பேசிக்கொண்டிருந்ததை மூன்று மீன்களும் கேட்டன.

முதல் மீன் எதற்கும் உடனேயே பதட்டப்படும் வகை. நாம் இனி இங்கு இருக்க கூடாது. உடனே புறப்பட்டு வேறு குளத்திற்கு போய்விடவேண்டும் என்றது.

இரண்டாவது மீன் எப்போதும் விதிப்படி தான் நடக்கும் என்ற வகையை சேர்ந்தது.விதி இப்படி தான் நடக்கும் என்றால் அப்படி தான் நடக்கும்-அதற்காக கவலை படக்கூடாது-ஆகையால் நான் எங்கும் போகவில்லை என்றது.

மூன்றாவது மீன்- இதை தவிற்க ஏதாவது செய்யவேண்டும்-தப்பிக்க என்ன செய்யவேண்டும் என்ன முயற்சி எடுக்கவேண்டும்? என்ற வகையை சேர்ந்தது.

மீனவன் வலையை வீசினான். முதல் மீன் குளத்தை விட்டு வேறு குளத்திற்கு புறப்பட்டது- ஆனால் பெரிய ஆற்றில் மாட்டிக்கொண்டது. ஒரு பெரிய மீன் அதை விழுங்கி விட்டது.

இரண்டாவது மீன் தன் விதியை நினைத்து பேசாமல் மூச்சு திணறி இறந்தது.

மூன்றாவது மீன் தான் செத்ததுபோல் வலையில் கிடந்தது. மீனவன் அது செத்தது என்று எடுத்து வீசி எறிந்தான். அது தத்தி தத்தி மீண்டும் குளத்தில் குதித்து மீனவர் வலையில் விழாமல் பிழைத்து.

ஆபத்து காலத்தில் புத்தியை உபயோகித்து செயல் படவேண்டும்

Four Friends

நான்கு சினேகிதர்கள்

ஒரு சமயம் ஒரு காட்டில் மூன்று நண்பர்கள்- ஒரு காகம், எலி, ஆமை-கூடி வாழ்ந்தார்கள். அவைகளில் எலி ரொம்ப புத்திசாலி.ஒரு நாள் சித்ராங்கன் என்ற மான் வெகு வேகமாக ஓடி வந்தது, அதை ஒரு வேடன் துரத்தி பிடிக்கவந்துகொண்டிருந்தான் என்று பயந்து. இதை பார்த்த எலி பொந்துக்குள் புகுந்து கொண்டது. ஆமை தண்ணீருக்குள் சென்றது. காகம் மரத்தின்மேல் ஏறிக்கொண்டது.

கொஞ்சநேரம் சென்றது. யாரையும் காணாமல் எல்லாம் வெளியே வந்தன. மானை பார்த்து-நீ பயப்படாமல் எங்களுடன் நாலாவது நண்பனாய் இரு. எங்களிடையே வாசம் செய் என்று மானை சேர்த்துகொண்டன.

மான் மிக்க வந்தனத்தை தெரிவித்து-நான் வேட்டைகாரனுக்கு பயந்து ஓடி வந்தேன். உலகில் நான்கு வித நண்பர்களை பார்க்கலாம். ஒருவன் ரத்த சம்பந்தப்பட்டவன். ஒருவன் உறவினன், ஒருவன் விவாகத்தால் சம்பந்தப்பட்டவன், ஒருவன் ஆபத்து காலத்தில் உதவுபவன். கடைசீயில் சொல்லப்பட்டவன் மிக சிலாக்கியமானவன். நீங்கள் அந்த கடைசி வர்க்கத்தை சேர்ந்தவர்கள். நான் பாகியசாலி என்றது.

நான்கும் சந்தோஷமாக காலம் கழித்துவந்தன. ஆனால் ஆமைக்கு ஒரு சந்தேகம். அது மானை-உன்னை யாராவது துரத்தியது நிஜமா? என்று கேட்டது. அதற்கு மான் அது நிஜம்-இங்கு ருமாங்கதன் என்ற ராஜா வேட்டையாட கூடாரம் போட்டிருக்கிறான். அவனால் எந்த நேரமும் ஆபத்து. அவன் இங்கு வருவதாக வதந்தி.

இதை கேட்ட ஆமை பயத்துடன் நாம் வேறு இடத்திற்கு செல்லலாம் என்றது. காகமும, மானும் இதற்கு ஒப்புக்கொண்டன. ஆனால் புத்திசாலி எலி கேட்டது- நீங்கள் வேறு இடத்தை சேறும் வரை நமக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? ஆமையோ மெதுவாக நகரும், அது தவிர போன இடம் பத்திரமானது என்று எப்படி தெரியும்? என்றது.

ஆமை பயத்தால் வேறு இடத்திற்கு போக முடிவு செய்து விட்டது. அதற்கு எலி ஆமையிடம் நன்றாக யோஜனை செய். ஒருவனுக்கு தன் உண்மையான கடமை என்ன? அது கஷ்டப்படுபவரை கண்டு இரக்கபட்டு உதவுவதுதான். உண்மையான சந்தோஷம் எது? நல்ல ஆரோக்கியமான சரீரம், உண்மையான நேசம்-அன்பு-மற்றவர்களுக்கு நன்மைகளை விரும்புவது-கடைசீயாக எது புத்திசாலித்தனம்? சமயத்தை அறிந்து, ஆபத்தை உணர்ந்து முடிவு எடுப்பதுதான்.

கஷ்ட காலத்தில் புத்திசாலித்தனம் நல்ல முடிவை எடுக்க உதவும். ஒரு குடும்பத்தை காப்பாத்த-ஒருவனை பலி கொடுக்கலாம், ஒரு கிராமத்தை காக்க ஒரு குடும்பத்தை பலி கொடுக்கலாம், ஒரு தேசத்தை காக்க ஒரு கிராமத்தை விட்டு கொடுக்கலாம்-ஒருவனுக்கு தனக்கே கஷ்டம் வந்தால் அந்த இடத்தை விட்டே நகரலாம்- யோஜித்து முடிவு எடு என்றது எலி.

ஆமை என்ன சொல்லியும் கேட்காமல் அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு நகர ஆரம்பித்தது. அது கொஞ்ச தூரம் சென்றதும் வேட்டைக்காரன் அதை எடுத்து வலையில் போட்டுக்கொண்டான். இதை பார்த்த மற்ற நண்பர்கள் தன் நண்பனுக்கு ஏற்பட்ட ஆபத்தை நினைத்து வருந்தின.ஆபத்து காலத்தில் உதவுவது தான் தர்மம். ஒரு நல்ல நண்பன் மனைவி, மக்களை காட்டிலும் உயர்ந்தவன், அவனுடைய ஆனந்தமே தன் ஆனந்தம், அவனது கஷ்டமே தன் கஷ்டம் என்று உணர்பவன் தான் நல்ல நண்பன். எலி மற்ற நண்பர்களை அழைத்து, காலத்தை வீணாக்காமல் நண்பனை காப்பாற்ற முயர்ச்சி உடனடியாக எடுக்கவேண்டும் என்றது.

எலி சித்ராங்கதன் என்ற மானினிடம்-நீ வேடன் முன்பாக ஓடி அந்தஓடையின் முன்பாக இறந்தது மாதிரி படுத்துக்கொள். காகம் உன்மேல் உட்கார்ந்து உன்னை கொத்துவதுபோல் நடிக்கட்டும். வேடன் நிச்சியமாக ஆமையை வைத்துவிட்டு உன்னிடம் வருவான். அதற்குள் நான் அந்த வலயை கடித்து துளைத்து ஆமையை விடுவித்துவிடுகிறேன். ஆமையும் நகர்ந்து பக்கத்தில் உள்ள நீரில் புகுந்துவிடட்டும் என்று யோஜனை கூறியது.

அதன்படி மான் செய்தது. வேடனுக்கோ ரொம்பவும் சந்தோஷம். தனக்கு ஆமையோடு கூட மான் மாமிசமும் கிடைக்கபோகிறது என்று ஆமையை ஓரத்தில் வைத்துவிட்டு மான் பக்கம் போனான். அதற்குள் எலி ஆமையை விடுவித்து மரபொந்தில் புகுந்துவிட்டது. ஆமையும் நகர்ந்து தண்ணீரில் புகுந்து கொண்டது. மானும் ஓட்டம் பிடித்தது. வேடனுக்கு ஆமையும் கிடைக்கவில்லை, மானும் கிடைக்கவில்லை.

பேராசை பெரு நஷ்டம்.
நண்பர்களின் ஒற்றுமை லாபகரமானது.

Foolish Weaver

ஏழை முட்டாள் நெசவாளி

ஒரு ஊரில் ஒரு ஏழை நெசவாளி வெகு கஷ்டப்பட்டு உழைத்து தன் குடும்பத்தை காப்பாற்றி வந்தான். அவனுடைய தறியும் பழுதான நிலையில் இருந்தது. அதை சரி செய்ய காட்டிற்கு சென்று மரத்தை கொண்டுவர புறப்பட்டான்.

அவன் ஒரு மரத்தை தேர்ந்தெடுத்து அதை வெட்ட கோடாறியை எடுத்தான். அப்போது அந்த மரத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது. அது அந்த மரத்தில் வசிக்கும் தேவதையுடைய குரல். நண்பா! நான் பலகாலம் இந்த மரத்தில் வசித்து வருகிறேன். இதை வெட்டதே- அதற்கு பதிலாக ஒரு வரம் கேள், தருகிறேன் என்றது. விவசாயும் தன் மனைவியை கலந்து சொல்கிறேன் என்று விடைபெற்றுக்கொண்டு வீடு திரும்பினான்.

வழியில் அவன் சிநேகிதனை கண்டான்-தேவதை சொன்னதை சொல்லி யோஜனை கேட்டான். அதற்கு நண்பன்-நான் இந்த இடத்திற்கு ராஜாவாக வேண்டும் என்று கேள் என்றான். நெசவாளி வீடு திரும்பியவுடன் மனைவியுடன் நடந்ததை சொல்லி என்ன கேட்கலாம் என்று சொல் என்று கேட்டான்.

அவன் மனைவியும் நமக்கு அரசு வேண்டாம்-அதை நிர்வாகம் செய்ய நம்மால் முடியாது. நமக்கு இப்போது இரண்டு கைகள் தான் இருக்கின்றன. அதனால் நம்மால் கொஞ்சம் தான் துணி நெய்ய முடிகிறது. அதற்கு பதிலாக நாங்கு கைகள் இருந்தால் நிறைய துணிகள் நெய்யலாம்-நல்ல லாபமும் கிடைக்கும்-ஆகையால் நீ போய் எனக்கு நான்கு கைகள் இரண்டு தலைகள் வேண்டும் என்று கேள் என்றாள்.

அவனும் தேவதையை அப்படியே கேட்டான்-அதுவும் அப்படியே தந்தது. அவன் சந்தோஷமாக வீடு திரும்பினான். அவனை பார்த்த மக்கள் பயந்து இது ஏதோ ஒரு பேய் அல்லது காட்டு மிருகம் என்று அவனை அடித்து கொன்றுவிட்டார்கள். முட்டாள்தனமான ஆசையால் முதலே போய்விட்டது.

நல்ல நேரம் வரும்போது நாம் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளவேண்டும்.

The Bull and the Lion


காளையும், சிங்கமும்-முதுகில் குத்தாதே!

ஒரு சிறிய நகரத்தில் சாம்பன் என்ற வியாபாரி சிறு பொருட்களை விற்று குடும்பன் நடத்திகொண்டிருந்தான். அவனது வருமானம் போதுமானதாக இருந்தாலும் தன்னால் தன் குழந்தைகளுக்கு கேட்டதை எல்லாம் வாங்கி தர முடியாதநிலையில் இருந்தான். தான் இங்கேயே இருந்து இதற்கு மேல் சம்பாதிக்க முடியாது-வேறு இடங்களுக்கு போய் பொருட்கள் கொண்டு வந்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்று நினைத்தான்.

அதன் பிரகாரம் ஒரு இரட்டை மாட்டு வண்டியையும் இரண்டு காளைகளையும் வாங்கி வெளியூருக்கு புறப்பட்டான். கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு காளைக்கு காலில் காயம் பட்டு நடக்கமுடியாமல் போய்விட்டது. வியாபாரி யோஜனை செய்து-இதனால் தன் முயர்ச்சிக்கு தடங்கல் வர்க்கூடாது என்று அந்த காளையை அங்குள்ள வயலில் விட்டு விட்டு மெதுவாக வண்டியை ஒரு காளையோடு ஓட்டி சென்று பக்கத்து நகரில் வேறு காளையை வாங்கி பயணத்தை தொடர்ந்தான்.

நிற்க, வயலில் விடப்பட்ட காளை அங்குள்ள புல்லை தின்று கொஞ்சம் கொஞ்சமாக தேறி மறுபடியும் பழைய காளையாகிவிட்டதுகாளைக்கு ரொம்பவும் சந்தோஷம். வேளாவேளைக்கு சாப்பாடு, நிம்மதியான வாழ்க்கை. சுதந்திரமாக திரியலாம். அந்த சந்தோஷத்தில் அது பெரிய குரலில் கத்திற்று. அப்போது அந்த பக்கம் ஒரு சிங்கம் தண்ணீர் குடிக்க வந்தது. தான் இதுவரை கேட்டிராத குரலை கேட்டு பயந்து ஓடிவிட்டது.

இதை பார்த்துகொண்டிருந்த இரு நரிகள் இதை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திகொள்ள முடிவு செய்தன. அதற்கு முதலில் சிங்கத்தினிடம் நல்ல பேயர் வாங்கி அவனுக்கு வேலைக்காரர்கள் ஆகவேண்டும். அதில் ஒரு நரி முதலில் சிங்கத்தினிடம் சென்று-சிங்க ராஜாவை பலவாறு புகழ்ந்து சிங்கத்தினிடமிருந்து அதன் பயத்திற்கு காரணம் என்ன என்று தெரிந்துகொண்டது.

பிறகு அந்த நரி தான் அதன் பயத்தை போக்குவதாக சொல்லி காளையிடம் சென்றது. காளையாரே! நாம் எல்லோரும் இந்த சிங்க ராஜாவிற்கு அடிமைகள் நாம் சந்தோஷமாக இங்கு இருக்கவேண்டுமானால் அவனுக்கு மரியாதை செலுத்தவேண்டும் என்றது. காளையும் அது சரிதான் என்று நரியுடன் சென்று சிங்கத்தை பார்த்தது.

நரி சிங்கத்தினிடம் சென்று தாங்கள் பயந்த சப்தம் இந்த காளையிடமிருந்து தான் வந்தது-இனி பயப்படவேண்டாம் என்றது. சிங்கமும் நரியின் இந்த வீர செயலை பாராட்டி நரியை தனக்கு மந்திரியாக நியமித்தது.

கொஞ்சநாள் சென்றதுநரியின் அதிகாரத்தை பொறுக்கமுடியாமல் காளை மெதுவாக சிங்கத்தின் நட்பை பெற பல வேலைகளை செய்து சிங்கத்தை திருப்தி ச்ய்து கொண்டு வந்தது. சிங்கமும் மகிழ்ந்து காளையை பிரதம மந்திரியாக்கியது.காளையும் சிங்கமும் நெருங்கி பழக ஆரம்பித்தன.

இதை கண்ட நரிகள் பொறாமையுற்றன. இதை எப்படியாவது முறித்து விடவேண்டும் என்று யோஜனை செய்தன. மெதுவாக சிங்கத்தினிடம் வருத்ததுடன்-தாங்கள் நம்பியிருக்கும் காளை மமதையால் தானே அரசனாக வேண்டும் என்று உங்களை சமயம் பார்த்து கொண்று விட முடிவு செய்திருக்கிறது என்று பணிவுடன் கூறின. இதை நான் எப்படி நம்புவது என்று சிங்கம் கேட்டது. அதற்கு நரி- உங்களை பார்த்தவுடன் தன் கால்களை உதைத்துக்கொண்டு கொம்பை தாழ்த்தி உங்களை குத்த வரும் பாருங்கள் என்றன.

பிறகு நரிகள் காளையிடம் இதேமாதிரி மாற்றி சொல்லி விரோதத்தை ஏற்படுத்தி வேடிக்கை பார்த்தன. காளையும் அதே மாதிரி சிங்கத்தை நோக்கி பாய்ந்தது. சிங்கமும் கோபத்துடன் காளையின் மீது பாய்ந்து காளையை கொன்றது. நரிகளுக்கு மிகவும் சந்தோஷம்.

ல்ல நண்பர்கள் பிறர் சொல்வதை அப்படியே நம்பாமல் தீர விசாரித்து உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் விபரீதமே!