Monday, September 20, 2010

Three Fishes

மூன்று மீன்கள்

ஒரு குளத்தில் மூன்று மீன்கள் வாழ்ந்து வந்தன. அவர்கள் சந்தோஷமாக காலம் தள்ளிவந்தன. ஒரு நாள் சில மீனவர்கள் அந்த பக்கம் வந்தார்கள். அவர்கள் இந்த குளத்தில் நிறைய மீன்கள் இருக்கின்றன. வலையை வீசினால் நல்ல மீன்கள் கிடைக்கும் என்று பேசிக்கொண்டிருந்ததை மூன்று மீன்களும் கேட்டன.

முதல் மீன் எதற்கும் உடனேயே பதட்டப்படும் வகை. நாம் இனி இங்கு இருக்க கூடாது. உடனே புறப்பட்டு வேறு குளத்திற்கு போய்விடவேண்டும் என்றது.

இரண்டாவது மீன் எப்போதும் விதிப்படி தான் நடக்கும் என்ற வகையை சேர்ந்தது.விதி இப்படி தான் நடக்கும் என்றால் அப்படி தான் நடக்கும்-அதற்காக கவலை படக்கூடாது-ஆகையால் நான் எங்கும் போகவில்லை என்றது.

மூன்றாவது மீன்- இதை தவிற்க ஏதாவது செய்யவேண்டும்-தப்பிக்க என்ன செய்யவேண்டும் என்ன முயற்சி எடுக்கவேண்டும்? என்ற வகையை சேர்ந்தது.

மீனவன் வலையை வீசினான். முதல் மீன் குளத்தை விட்டு வேறு குளத்திற்கு புறப்பட்டது- ஆனால் பெரிய ஆற்றில் மாட்டிக்கொண்டது. ஒரு பெரிய மீன் அதை விழுங்கி விட்டது.

இரண்டாவது மீன் தன் விதியை நினைத்து பேசாமல் மூச்சு திணறி இறந்தது.

மூன்றாவது மீன் தான் செத்ததுபோல் வலையில் கிடந்தது. மீனவன் அது செத்தது என்று எடுத்து வீசி எறிந்தான். அது தத்தி தத்தி மீண்டும் குளத்தில் குதித்து மீனவர் வலையில் விழாமல் பிழைத்து.

ஆபத்து காலத்தில் புத்தியை உபயோகித்து செயல் படவேண்டும்

No comments:

Post a Comment