Thursday, March 18, 2010

நிர்யாதனா பத்ததி- 8


நிர்யாதனா பத்ததி- 8


அபிஷேகோத்ஸவாத் தஸ்மாத்
யஸ்யா நிர்யாதனோத்ஸவ:
அத்யரிச்யத தாம் வந்தே
பவ்யாம் பரததேவதாம் //

பாதுகைக்கு பட்டாபிஷேகம் நட.ந்தது மகோன்னதமான உத்ஸவமாக இருந்தது. அதைவிட கோலாகலமான நிகழ்ச்சி அது ராமர் 14- வருஷம் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பியபோது பரதன் அந்த பாதுகையை திரும்ப ராமனிடம் சேர்த்தபோது. அப்பேற்ப்பட்ட பாதுகையை நான் ஸேவிக்கிறேன்.

உபாஸ்ய வர்ஷாணி சதுர்தச த்வாம்
உத்தாரிகாம் உத்தரகோஸலஸ்தா:
ஸநந்தநாத்யைரபி துர்விகாஹம்
ஸா.ந்தா.நிகம் லோகமவாபுரக்ர்யம் //

பாதுகையே ! வடக்கு கோஸல நாட்டவர்கள் உனக்கு 14-வருஷம் அடிமைகளாக இருந்ததால் ஆழ்வார்கள், யோகிகள் அடையமுடியாத ஸாந்தானிகம் என்ற லோகத்தை அடைந்தார்கள். ப்ரப்த்தி பண்ணாமல் உன்னால் கோஸல தேசத்தவர்கள் எல்லோரும் பகவானை வந்து அடை.ந்தது பாதுகையின் தனி சிறப்பினால். ( ஆசார்யர்கள், பாகவதர்கள்சிலருக்கு ப்ரப்த்தி பண்ணி வைக்கிறார்கள்-அதனால் சிலர் ப்ரப்த்தி பண்ணாமலேயே பலனை அடைகிறார்கள் என்பது கருத்து )

ராமஸ்ய ராக்ஷஸ வதத்வரிதஸ்ய காலே
பாதாவநி ப்ரகடயந் இவ பார்ஷ்ணிகுப்திம்
ஆசித்ரகூடம் அதிகம்ய சசம்ஸ வார்த்தாம்
அவ்யாஹதத்வதபிஷேக ம்ருதங்கநாத: //

பாதுகைக்கு பட்டாபிஷேகம் பண்ணும்போது வாத்ய கோஷங்கள் முழங்கின அந்த சப்தம் சித்ரகூடம் வரை கேட்டதாம். அது ஸ்ரீ ராமருக்கு பின் பக்கபலமாக நாங்களும் வ.ந்துவிட்டேன் என்று அறிவிப்பது போல இருந்ததாம். ( பகவான் ஆசார்யர்கள் மூலமாகத்தான் ஜீவனுக்கு முக்தி அளிக்கிறார் என்பது கருத்து )

தேவி த்வயா ஸ்நபநஸம்பதி ஸம்ச்ரிதாயாம்
தக்தே புரே தசமுகஸ்ய வலீமுகேந
ஆஸீத் தத: ப்ரப்ருதி விச்வஜநநப்ரதீதம்
அத்ப்யோ அக்நிரிதி அவிததம் வசநம் முநீநாம் //

ஏ பாதுகையே! உனக்கு பட்டாபிஷேகம் முடிந்தது. லங்கையிலோ ஹனுமார் லங்கையே கொளுத்தினார். அப்போது ஜலதில் இருந்து அக்னி கிளம்பியது.இப்படி ஆகும் என்று ரிஷிகள் முன்பே சொல்லியிருந்தார்கள். அ.ந்த வாக்கு பலித்தது.

நிர்கத்ய தேவி பரதாஞ்சலி பத்மமத்யாத்
பூய: ஸமாகதவதீ புருஷோத்தமேந
பத்மேவ பத்ரமகிலம் மணிபாதரக்ஷே
ப்ராதுச்சகார பவதீ ஜகதாம் த்ரயாணாம் //

ஏ பாதுகையே ! துர்வாஸர் இ.ந்திரனுக்கு சாபம் கொடுத்தார். அதன் விளைவாக ல்க்ஷ்மி மறைந்துபோய் பிறகு பாற்கடல் கடையப்பெற்றபோது அதிலிருந்து தாமரை பூவில் அமர்ந்து பெருமாளை அடை.ந்து எல்லா உலகங்களுக்கும் க்ஷேமத்தை உண்டு பண்ணினாள். அதுபோல பரதர் உன்னை ஸ்ரீ ராமர் திருவடியில் சேர்த்தார். அவரோடு கூட நீ சகல உலகங்களுக்கும் க்ஷேமத்தை உண்டு பண்ணினாய்.


R.Jagannathan.



No comments:

Post a Comment