Tuesday, March 9, 2010

அதிகாரபரிக்ரஹ பத்ததி


அதிகாரபரிக்ரஹ பத்ததி

அபீஷ்டே பாதுகா ஸா மே யஸ்யாஸ் ஸாகேதவாஸிபி:
அ.ந்வய வ்யதிரேகாப்யாம.ந்வமீயத வைபவம் //

பாதுகை அயோத்தியில் எழுந்தருளி இரு.ந்தபோது அயோத்தியே மஹோத்ஸவமாயிருந்தது. அவை காட்டுக்கு எழுந்தருளியபோது அயோத்தி வெறுச்சோடியது. அதுபோல் ஸ்ரீ நம் பெருமாள் பல இடங்களில் எழு.ந்தருளும் போது அங்கெல்லாம் கல்யாண கோலம் காணலாம். பிறகு அவர் மூலஸ்தானம் சேர்ந்தவுடன் அங்கு கலையெல்லாம் போய்விடும்.

ஸாம்ராஜ்ய ஸம்பதிவ தாஸஜ.நோசிதா த்வம்
ராமேண ஸத்யவசஸா பரதாய தத்தா
ஸ த்வாம் .நிவேஸ்ய சரணாவநி பத்ரபீடே
ப்ருத்வீம் புபோஜ புபுஜே ச யஸோ விபூதிம் //

ஸ்ரீ ராமர் காட்டிற்கு போவதாக ஒப்புக்கொண்ட பிறகு பரதனுக்கு உன்னை அளித்தார். பரதனோ உன்னை ஸிம்மாஸனத்தில் ஏற்றி வைத்து பூமியை காப்பாற்றி எல்லையில்லா புகழை அடை.ந்தார். ஒரு சிஷ்யன் நல்ல ஆசார்யரிடத்தில் பக்தியோடு கைங்கரியம் செய்தால் அவன் பாபங்கள் போய் நல்ல கதியை அடைகிறான்.

ராமப்ரயாண ஜ.நிதம் வ்யபநீய ஸோகம்
ரத்நாஸனே ஸ்திதவதீ மணிபாதரக்ஷே
ப்ருத்வீம் நிஜேந யஸஸா விஹிதோத்தரீயா
மேகாதபத்ரதிலகாம் பவதீ விதேநே//

பாதுகையே ! நீ ராமனை விட்டு பிரிந்த துக்கத்தை உன்னிடத்தில் அடக்கிக்கொண்டு ராஜ்ய பரிபாலனம் செய்து மக்களை காப்பாற்றினாய்.  ( ஆச்சார்யர்கள் பகவானை விட்டு பிரி.ந்து அ.ந்த துக்கத்தை அடக்கிக்கொண்டு சிஷ்யர்களுக்கு ஸகல ஸௌக்கியங்களையும் உண்டுபண்ணுகிறார்கள்.

ப்ராப்தே திவம் தசரதே பரதே விலக்ஷே
பர்யாகுலேஷு ப்ருசமுத்தர கோஸலேஷு
தவம் சேத் உபேக்ஷிதவதீ க இபாவவிஷ்யத்
கோபாயிதும் குஹஸஹய விபோ: பதம் தத் //

ஸ்ரீ ராமர் காட்டிற்கு சென்ற பின் தசரதர் ஸ்வர்கலோகம் சென்றுவிட்டார். ராஜா இல்லாமல் ஜனங்கள் தவித்தார்கள். நீ பட்டத்தை ஒப்புக்கொள்ளாவிட்டால் ராஜ்யத்தை யார் காப்பாற்றுவார்கள்? ( ந்ல்ல ஆச்சார்யர்கள் இல்லாமல் போனால் உலகம் எப்படி நன்மை அடையும்? )

வீரவ்ரதப்ரணயிநி ப்ரதமே ரகூணாம்
ப்ராப்தே சிராய பரதே வதம் ஆஸிதாரம்
த்யக்த்வா பதாவநி விவிதாந் விஹாராந்
ஏகாஸிகாவ்ரதம் அபூர்வம் அவர்த்தயஸ் த்வம் //

ஸ்ரீ ராமரோ சத்ருக்களை அழிக்காமல் அயோத்தி திரும்பமாட்டேன் என்று வ்ரதம் பூண்டார். பரதனோ பட்டத்தை ஒப்புக்கொள்ளமாட்டேன் என்றார். நீயோ ! உன்னுடைய சஞ்சார குணத்தை விட்டு ஒரே இடத்தில் 14- வருஷம் இருந்தாய். ராமர் வ்ரதம் க்ஷத்திரியர்களுக்கு ஏற்றதே. பரதன் இந்திரியங்களை அடக்கியது கொஞ்சம் கஷ்டம். அதைவிட கடினம் நீ செய்தது. ( ஆழ்வார் அவதரித்தது முதல் மரப்பொந்தில் 16- வருஷம் இரு.ந்தது மிக ஆச்சர்யம் )

ப்ராப்யாதிகாரம் உசிதம் புவந்ஸ்ய குப்த்யை:
பத்ராஸநம் பரதவந்திதம் ஆச்ரயந்த்யா:
மத்யேsவதீர்ணமிவ மாதவ பாதரக்ஷே
மாதஸ் த்வயாபி மநுவம்ஸமஹீபதீ.நாம் //

ஏ பாதுகையே ! லோகங்ககளை காப்பாற்ற நீ ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்தது மனு வ்ம்ஸ ராஜாக்கள் மத்தியில் நீயும் ஒருத்தியாக தோன்றுகிறது. அது உனக்கு பொருந்தும். ஆழ்வார் ஆச்சார்யர்கள் பரம்பரையில் சேர்ந்தது அந்த பரம்பரைக்கு அல்ங்காரமாக இருந்தது.

பத்ராஸநம் சேத் பரிவ்ருத்தம் ஆஸீத்
தேவீ க்ஷணம் தக்ஷிணதோமுகம் தே
கதம் பவேத் காஞ்சனபாதரக்ஷே
ராமஸ்ய ரக்ஷோம்ருகயாவிஹார: //

ஏ பாதுகையே  ! உனது ஸிம்ஹாஸனத்தை தெற்கு முகமாக திருப்பினேயானால் லங்கையில் உள்ள ராக்ஷஸர்கள் எல்லாம் அழி.ந்துவிடுவார்கள். அப்போது ஸ்ரீ ராமனுக்கு வேலையே இருக்காது.

மகதாங்க களிங்க வங்கமுக்யான்
விமதாந் ரந்த்ரகவேஷண: ஸ்ஸைந்யாந்
ரகுபுங்கவபாதுகே விஜிக்யே
பரதஸ்ஸாஸநம் உத்வஹந் பவத்யா: //

பாதுகையே ! உன்னிடம் நியமனம் பெற்று பரதன் எல்லா சத்ருக்களையும் ஜயித்தார். ( ஒருவன் நல்ல ஆசார்யர் கிடைகக பெற்றால் எல்லாவற்றையும் வெல்லமுடியும் என்பது கருத்து.


R.Jagannathan.



No comments:

Post a Comment