Tuesday, August 31, 2010

Don't Advice Fools

முட்டாளுக்கு அறிவுரை சொல்லாதே!

காவேரி கரை ஓரத்தில் ஒரு பெரிய ஆலமரம் தழைத்தோங்கி பல கிளைகளுடன் இருந்தது. அதில் பட்சிகள் எல்லாம் கூடு கட்டிக்கொண்டு ஆனந்தமாக வசித்து வந்தன. அந்த மரம் அவைகளுக்கு நல்ல பாதுகாப்பாக இருந்தது.

மழை காலம். நல்ல மழை பெய்துகொண்டிருந்தது. அந்த சமயம் குரங்கு கூட்டங்கள் மழைக்காக மரத்தின் அடியிலும் கிளைகளிலும் தங்கின. அவைகளை பார்த்த பறவைகள் எள்ளி நகைத்து- குரங்குகளே! இப்படி மரத்துக்கு மரம் தாவி வீணே காலத்தை கழிக்கிறீர்களே-உங்களுக்கென்று ஒரு வீடு எங்களைபோல் கட்டிக்கொண்டிருக்ககூடாதா? என்று அறிவுரை கூறியது.

பறவைகளின் இந்த அறிவுரை குரங்குகளுக்கு பிடிக்கவில்லை. மழை நிற்கட்டும், இவைகளுக்கு புத்தி புகட்டலாம் என்று மழை விட காத்திருந்தன.
மழை விட்டவுடன் எல்லா குரங்குகளும் மரத்தின் மேல் ஏறி எல்லா கூண்டுகளையும் அழித்துவிட்டு முட்டைகளையும் உடைத்து போட்டுவிட்டு போய்விட்டது.

பறவைகள் பயத்தால் அங்கும் இங்கும் பறந்து-தாங்கள் முட்டாள்களுக்கு போய் அறிவுரை சொன்னோமே என்று வருத்தப்பட்டன.

முட்டாள்களுக்கு அறிவுரை கோபத்தை தான் கிளரும்-விபரீதத்தில்ல் முடியும்.

No comments:

Post a Comment