Tuesday, August 31, 2010

The Elephant and Jackal

ஹிதோபதேச கதைகள்-12

யானையும் நரியும்

ஒரு காட்டில் பல நரிகள் கூட்டமாக வாழ்ந்துவந்தன. ஒரு நாள் அதன் வழியே ஒரு யானை சென்றுகொண்டிருந்தது. நரி கூட்டத்தின் தலைவன்-ஒரு வயசான நரி யானையை பார்த்து இவன் நமக்கு இரையானால் நமக்கு நல்ல விருந்து கிடைக்கும், நமக்கும் பல நாட்கள் ஆகாரம் இருக்கும் என்றது.

அதை கேட்ட மற்ற நரிகள்- இவ்வளவு பெரிய யானையை நம்மால் எப்படி கொல்ல முடியும்-நாமோ ஒரு துரும்பு-அதன் முன்னால்- என்றன. அதற்கு தலைவன் சொன்னான்- ஆம் நாம் சிறு துரும்புதான் ஆனால் சிறு துறும்பும் பல் குத்த உதவும்-நாம் நம் மூளையை உபயோகப்படுத்தினால் இந்த காரியத்தை வெற்றிகரமாக நடத்தலாம் என்று அதை செய்ய முன் வந்தது.

அது யானையிடம் போய்-ஓ! அரசே! எங்களின் மனமார்ந்த நமஸ்காரம் என்று வணங்கியது. யானை அதிச்சியடைந்து நரியை பார்த்து-நீங்கள் யார், எனக்கு உங்களை தெரியாதே என்றது.

நரி உங்களுக்கு எங்களை தெரியாது-வாஸ்தவம். ஆனால் உங்களை எங்களுக்கு தெரியும். உங்கள் பராக்ரமத்தை நாங்கள் அறிவோம். இந்த காட்டில் தற்போது ராஜா யாரும் இல்லை. ராஜா இல்லாத நாடு ஆபத்தானது. மக்கள் சுகமாக வாழ முடியாது. செல்வம் சேர்க்கமுடியாது. நீங்கள் பலசாலி. இனி நீங்கள் தான் எங்களுக்கு அரசன்.

உங்களை முறைப்படி பட்டாபிஷேகம் செய்து வைக்கிறோம் என்றது. யானையும் மகிழ்ச்சியடைந்து ஒப்புக்கொண்டது. நரி யானையை தன் பின் தொடரமாறு கேட்டுக்கொண்டது. யானையும் அதன் பின்னே சென்றது. ஒரு புதர் வழியே கூட்டி சென்றது. அந்த பாதையில் ஆழமான சகுதி நிறைந்த பள்ளம் இருந்தது. அது தெரியாமல் யானை பள்ளத்தில் விழுந்தது.

கரையேறமுடியாமல் வாடி முடிவில் உயிரை விட்டது. நரிகளுக்கு ஒரே கும்மாளம். தங்களுக்கு நிறையாக பல நாட்களுக்கு ஆகாரத்திற்கு குறைவில்லை என்று ஆனந்தம் அடைந்தன.

நல்ல சகவாசம் நலத்தை தரும். கெட்ட சகவாசம் பாதாளத்தில் தள்ளிவிடும்.

No comments:

Post a Comment