Tuesday, August 31, 2010

Jackal and Drum

நரியும் மத்தளமும்

ஒரு காட்டில் நரி ஒன்று பசியோடு உணவுக்காக அலைந்துகொண்டிருந்தது. அது வழியில் ஒரு பாழடைந்த யுத்தகளத்திற்கு வந்து சேர்ந்தது. ஒரு மரத்தின் அடியில் ஒரு பெரிய பேரிகையை பார்த்து. திடீரென்று ஒரு சப்தம் கேட்டது. ஏதோ பயங்கர மிருகம் தான் தன்னை நோக்கி வருகிறது என்று நரி பயந்து ஓடி ஒரு மரத்தின் மறைவில் நின்று கொண்டு என்ன என்று திரும்பி பார்த்தது.

சற்று தொலைவில் பெரிய பேரிகையை ( மத்தளத்தை ) பார்த்தது. மரத்தின் கிளைகள் கார்றினால் மத்தளத்தின் மேல் பட்டு சப்தம் வந்து கொண்டிருந்தது. நரி மெதுவாக அதன் அருகில் வந்து பயம் நீங்கி மத்தளம் ஒரு பெரிய மிருகம்-தனக்கு நல்ல இறை என்று மகிழ்ந்து தோலை கடிக்க ஆரம்பித்தது.

தோலோ பழைய தோலானதால் கஷ்டப்பட்டு பல்லால் கடித்து ஓட்டை செய்தது. அதனுள் நல்ல ஆகாரம் இருக்கும் என்று ஏமாந்தது. ஆனாலும் தன்னுடைய பயம் நீங்கியது கண்டு மகிழ்ந்து மறுபடியும் இறையை தேட ஆரம்பித்தது.

எதை கண்டும் உடனே பயந்துவிடக்கூடாது என்று தெரிந்து கொண்டது.

No comments:

Post a Comment