Tuesday, August 31, 2010

Two Headed Crane

இரு தலை கொக்கு

நூறாண்டுகளுக்கு முன்னால் நமது தேசத்தில் பல அதிசயமான நிகழ்ச்சிகள், படைப்புகள் இருந்தன. ஒரு காட்டில் ஏறியில் சில அதிசய பறவைகள் வசித்து வந்தன. அதில் ஒன்று இரு தலைகளுடைய கொக்கு ஒன்றும். அதற்கு உடல் ஒன்று, தலை இரண்டு.

தலைகள் இரண்டும் வெவ்வேறாக செயல் பட்டதால் அவைகள் காலப்போக்கில் மறைந்து விட்டன. கடைசியாக மிஞ்சியது ஒரே பறவை. ஒரு சமயம் இந்த பறவை இரையை தேடி அலைந்தது. இரு தலைகளும் வெவ்வேறாக தேட ஆரம்பித்தது. அதில் ஒரு தலை அமிர்தம் போன்ற ஒன்றை கண்டுபிடித்தது.

அதற்கு ஒரே ஆனந்தம். அதை அவசரமாக பறுக ஆரம்பித்தது. இன்னொரு தலை எவ்வளவோ கெஞ்சி கேட்டபோதிலும் அது தராமல் எல்லாவற்றையும் குடித்து தீர்த்துவிட்டது. மற்ற தலைக்கு பொறாமை, கோபம். அப்படியே போய்கொண்டிருந்தபோது அது ஒரு விஷ திரவத்தை கண்டது. வஞ்சம் தீர்ப்பதற்காக அதை குடிக்க ஆரம்பித்தது.

அது உடல் ஒன்று தான் என்பதை மறந்துவிட்டது. சிறிது நேரத்தில் அது இறந்து விழுந்தது.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

No comments:

Post a Comment