Tuesday, August 31, 2010

Ungrateful Man

செய் நன்றி மறக்கும் மனிதன்

ஒரு ஊரில் ஒரு ஏழை பிராம்மணன் - ஹரி என்பவன் இருந்தான். அவன் ஏழையாய் இருந்தாலும் எல்லோருக்கும் உபகாரமாய் இருந்தான். சதா தெய்வத்தை பிரார்த்தனை செய்துகொண்டு காலத்தை போக்கி வந்தான். அவன் மனைவி அவனை-இப்படியே இருந்தால் நம் குழந்தைகள் பசியால் வாடுகின்றது. வெளியே போய் சம்பாதித்துவா என்று கடுமையாக சாடினாள்.

அந்த பிராம்மணனும் இனி தான் சும்மா இருக்கக்கூடாது, சம்பாதிக்க வேண்டும் என்று புறப்பட்டு சென்றான். வழியில் ஒரு பெரிய காட்டை கடக்கவேண்டியதாயிற்று. அப்போது ஒரு கிணற்றிலிருந்து-தன்னை காப்பாற்று என்று கூக்குரல்கள் கேட்டது. கிணற்றை எட்டி பார்த்தான். அதில் ஒரு மனிதன், ஒரு புலி, ஒரு பாம்பு, ஒரு குறங்கு ஆக நால்வர் மேலே ஏறிவரமுடியாமல் தவித்தன.

ஹரியை பார்த்த புலி- ஏ! பிராம்மணா! நீ என்னை காப்பாத்து, என்னை வெளியே எடுக்க முயர்ச்சி செய்வாய் என்று கெஞ்சியது. அதற்கு ஹரி நான் உன்னை வெளியே கொணர்ந்தால் நீ என்னை சாப்பிட்டுவிடுவாய் என்று பயமாய் இருக்கிறது என்றான். அதற்கு புலி-நான் நன்றி கெட்டவன் அல்ல-எனக்கும் குழந்தைகள் உள்ளன நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன் என்றது.

ஹரியும்- ஆறிலும் சாவு, நூறிலும் சாவு இவனை காப்பாற்றுவோம் என்று புலியை வெளியே கொண்டுவந்தான்- புலியும் நன்றி தெரிவித்து விடை பெற்றுக்கொண்டது. அடுத்து குறங்கையும் வெளிக்கொணர்ந்தான். உடனே பாம்பும் இவனை கெஞ்சியது. அதற்கு ஹரி எனக்கு பயமாய் இருக்கிறது . நீ என்னை கடித்துவிட்டால் என்ன செய்வது-எனக்கு குழந்தைகள், மனைவி இருக்கிறார்கள் என்றான்.

அதற்கு பாம்பு-நாங்கள் அனாவசியமாக யாரையும் கடிக்கமாட்டோம்-எங்களை தொந்தரவு தருபவர்களை மாத்திரம் தான் கடிப்போம்-உனக்கு நான் என்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன் என்றது. ஹரி பாம்பையும் காப்பாற்றினான்.

அந்த மூன்றும் நன்றி கூறிவிட்டு உள்ளே இருக்கும் மனிதனிடம் ஜாக்கிரதையாக இரு என்று எச்சரித்துவிட்டு அவைகள் இருப்பிடத்தை காட்டிவிட்டு சென்றன. ஹரியோ அந்த மனிதனிடம் இரக்கப்பட்டு அவனையும் காப்பாற்றினான். அவன் ஒரு தங்க நகை செய்யும் தட்டான்.

ஹரி காடு முழுவதும் அலைந்து கடைசியாக களைப்புடன் குறங்கு இருக்கும் இடம் வந்தான். குறங்கும் மிக்க மகிழ்ச்சியுடன் அவனுக்கு மரத்திலிருந்து கனிகளை பறித்து கொடுத்தது. ஹரியும் நன்றி சொல்லிவிட்டு மேலே போனான். அங்கு புலியை பார்த்தான். புலிக்கோ சந்தோஷம்.புலி அவனை வரவேற்று நீயோ மாமிசம் சாப்பிடமாட்டாய். அதற்கு பதிலாக நான் சில தங்க நகைகளை தருகிறேன். அதை விற்று உன் குடும்பத்தை காப்பாற்று. இந்த நகைகள்-நான் ஒரு இளவரசன் இந்த வழியாக போனபோது அவனை கொன்று புசித்துவிட்டேன். அவன் அணிந்து கொண்டிருந்த நகைகள் தான் இவை என்றது.

அவனும் அவைகளை பெற்றுக்கொண்டு நாடு திரும்பினான். நல்ல பசி இருந்ததால் வழியில் ஒரு வீட்டை பார்த்தான். அவன் அதிர்ஷ்டம் அது தட்டானுடைய வீடு. தட்டானும் அடையாளம் கண்டு கொண்டு அவனை உபசரித்தான். அந்த சமயம் ஹரி தன்னிடம் இருந்த நகைகளை காண்பித்து அதை விலைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டான்.

தட்டான் நகைகளை பரிசோதித்து இவைகளை தான் ராஜாவிற்கு இளவரசனுக்காக செய்து கொடுத்ததாக ஞாபகம் வரவே-ஒரு யோஜனை செய்தான். ஹரியை வீட்டிலேயே தங்க சொல்லி-தான் ராஜாவிடம் சமாசாரம் தெரிவித்தால் நல்ல வெகுமதி கிடைக்கும் என்றுஅவ்வாறு செய்து ராஜாவிடம் விவரம் சொன்னான். ராஜாவும் ஹரி தான் தன் மகனை கொன்று நகைகளை திருடி இருக்கிறான் என்று அவனை கைதி செய்து காராகிரஹத்தில் தள்ளிவிட செய்தான்.

ஹரி அப்போது புலி, குரங்கு, பாம்பு இந்த மனிதனை நம்பாதே என்று எச்சரித்ததை கேட்காததை நொந்துகொண்டான். அந்த சமயம் பாம்பை நினைத்தான். ஆச்சர்யமாக அந்த பாம்பு அவன் முன்னே தோன்றியது. ஹரி தன் கதையை சொன்னான். பாம்பு கவலை படாதே நான் உன்னை விடுவிக்கிறேன் என்று விலங்கை கடித்து அவனை விடுவித்தது.

அதோடு கூட ராஜாவிடமிருந்து நிறைய சன்மானம் பெற ஒரு வழியும் சொன்னது- தான் போய் இளவரசியை கடித்துவிடுகிறன். யாராலும் விஷத்தை எடுக்கமுடியாது. நீ ராஜாவிடம் தான் எடுப்பதாக கூறு. ராஜாவும் சம்மதிப்பான். பிறகு என்னை கூப்பிடு. நான் எடுத்துவிடுகிறன். ராஜாவும் உனக்கு நிறைய சன்மானம் தருவான். அதை வைத்துக்கொண்டு சந்தோஷமாக இரு என்றது.

அவனும் அப்படியே செய்தான். ராஜாவிடம் தட்டான் செய்த துரோகத்தை சொன்னான். ராஜாவும் தட்டானை தண்டித்து-ஹரிக்கு நிறைய சன்மானம் கொடுத்தனுப்பினான்

ஹரி பாம்பு, புலி, குரங்கிற்கு நன்றி தெரிவித்து சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தான்.

செய் நன்றி மறந்தவன் கொடிய பாபி. அவனுக்கு மன்னிப்பே கிடையாது.

No comments:

Post a Comment