Tuesday, August 31, 2010

Lion, Cat and Rat

சிங்கம், எலி, பூனை

ஒரு காட்டில் பெரிய ஆலமரம் இருந்தது. அதன் அடியில் ஒரு சிங்கம் வசித்துவந்தது. இதன் பொந்தில் ஒரு எலியும் இருந்தது. அது ஒரு விஷமக்கார எலி. சதா சிங்கத்தின் மேல் ஏறி அங்கும் இங்கும் குதிக்கும். அதன் வாலை கடித்து தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கும். எலியின் இம்ஸையை பொருக்காமல் சிங்கம் இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று தீர்மானித்து, வெளியே சென்று ஒரு பூனையை பார்த்தது.

பூனையிடம் நீ என்னோடு வந்து தங்கு, உனக்கு ந்ல்ல ஆகாரம் தினமும் நான் கொடுக்கிறேன் என்றது. பூனையும் சம்மதித்து அதன் இடம் வந்தது. அந்த பொந்தையும் காவல் காத்தது. எலி பயந்துகொண்டு வெளியே வரவில்லை. பல நாட்கள் சென்றன. எலி பசியால் வாடி கடைசியில் பொந்தை விட்டு வெளிவந்தது. பூனை அதை பிடித்து தனக்கு இறையாக ஆக்கிக்கொண்டது.

இதற்கு பிறகு கொஞ்ச நாளில் சிங்கம் தன்னுடைய தொந்தரவு ஒழிந்தவுடன் பூனையால் இனி நமக்கு பிரயோஜனம் இல்லை என்று அதை அசட்டை செய்தது. அதற்கு ஆகாரம் கொடுக்க மறுத்தது. பூனையும் பசியால் வாடி இறந்தது.
ஒரு நல்ல, புத்திசாலியான வேலைக்காரன் தன் எஜமானன் அவனுடைய உதவியை எப்போதும் நாடும்படியாக வைத்திருக்கவேண்டும். அப்போதுதான் அவன் சுகமாக இருக்கமுடியும்.

No comments:

Post a Comment